தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டணம் குறித்த கோரிக்கை!
கல்விக் கட்டணத்தை விலைவாசி உயர்வுக்கு
ஏற்ப உயர்த்தி அமைக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் சங்கங்களின்
கூட்டமைப்பு சார்பில் கட்டண நிர்ணயக் குழுவிடம் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
நீதியரசர் சிங்காரவேலு தலைமையிலான கட்டண
நிர்ணயக் குழு, தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டண
விகிதத்தை நிர்ணயிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. 2013 முதல் 2016 வரையிலான
கல்வியாண்டிற்கு நிர்ணயிக்க வேண்டிய கட்டணம் குறித்த கருத்துக் கேட்புக்கு
தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் பிரதிநிதிகள்
அழைக்கப்பட்டுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு 55 பள்ளிகள் வீதம் 12,500
பள்ளிகளுக்குமான கருத்துக் கேட்பு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்
நீதியரசர் சிங்காரவேலுவை சந்தித்த தமிழ்நாடு தனியார் பள்ளிகள்
கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், பள்ளிகளுக்கு செய்யப்படும் மூலதனச்
செலவுகளையும் கருத்தில் கொண்டு, அதிகரித்து வரும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப
கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.