12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்புப் பதிவு:
பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியர்கள் தாங்கள் பயின்ற
பள்ளிகளில் இணையதளம் மூலமாக வேலைவாய்ப்புப் பதிவை மேற்கொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதிப்பெண்
சான்றிதழ் வழங்கப்பட்டவுடன், மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து
வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யப்படும் மாணவர்களுக்கு, முதல் 15 நாட்களுக்கு ஒரே
பதிவு மூப்பு வழங்கப்படும்.10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை பதிவு செய்யாமல்
முதல்முறையாக 12-ஆம் வகுப்பிற்கு பதிவு செய்பவர்கள், மதிப்பெண் சான்றிதழ்
பெறும்போது குடும்ப அட்டையை எடுத்துச் செல்வது அவசியம் என
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மற்றவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை வைத்திருப்பது கட்டாயம். கூட்ட
நெரிசலை தவிர்க்கும் வகையில் செய்யப்பட்டுள்ள இந்த வசதியை மாணவ,
மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.