பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று (27.05.2013) வழங்கல்:
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று முதல், அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படுகிறது. 2012-13ம் ஆண்டிற்கான பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், கடந்த மார்ச் 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 9ம் தேதி வெளியிடப்பட்டது.
பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று
முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இன்று காலை
முதல், திருச்சி மாவட்டத்தில் அந்தந்த பள்ளிகளில் "மார்க் ஷீட்" வினியோகம்
செய்யப்படுகிறது.
பிளஸ் 2 தேர்ச்சியை பதிவு செய்து கொள்ள ஏதுவாக, மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளிகளிலேயே
ஆன்லைன் மூலம் பதிவு செய்யம் பணி நடக்கவுள்ளது.
வரும் ஜூன், 10ம் தேதி வரை, பதிவு செய்யும் மாணவ, மாணவிகளுக்கு, மே 27ம்
தேதி முதல் சீனியாரிட்டி வழங்கப்படும் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...