முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேருக்கு பணியிட மாறுதல்:
தமிழகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு மூலம்
வியாழக்கிழமை பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.தமிழகம் முழுவதும் 5,340 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல்
கோரி விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் மாவட்டங்களுக்குள் 1,496
பேருக்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் 600-க்கும்
மேற்பட்டவர்களுக்கும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
தேதி பின்னர் அறிவிக்கப்படும்:
உயர் நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு உள்ளிட்ட
பல்வேறு கலந்தாய்வுகளின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்
கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, முதுகலைப்
பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள்
இடமாறுதல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு
மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு தேதிகள் பின்னர்
அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம்
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் இந்தக்
கலந்தாய்வுகளுக்கான தேதி நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
ஆசிரியர்கள் இந்த ஆண்டு பணியிட மாறுதல் கோரி விண்ணப்பம் செய்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...