மே 27 முதல் ஜூன் 10 வரை பள்ளிகளில் வேலைவாய்ப்புப் பதிவு:
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் வரும் 27-ஆம் தேதி முதல் அடுத்த மாதம்
10ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக வேலைவாய்ப்புப் பதிவை மேற்கொள்ளலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில், வரும் 27-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ்
வழங்கப்படுவதால் அன்றைய தினம் முதல் 15 நாட்களுக்கு பள்ளிகளில் பதிவு
செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித்
தகுதியை புதிதாக பதிவு செய்யும் மாணவர்களுக்கு உடனுக்குடன் வேலைவாய்ப்பு
அடையாள அட்டை வழங்கப்படும்.
இவர்கள் மதிப்பெண் சான்றிதழ் பெறச்
செல்லும்போது குடும்ப அட்டை மற்றும் சாதிச் சான்றிதழை எடுத்துச் செல்வது
அவசியம். ஏற்கனவே 10-ஆம் வகுப்பு தகுதியைப் பதிவு செய்தவர்கள், தாங்கள்
வைத்துள்ள வேலைவாய்ப்பு அடையாள அட்டையை எடுத்துவர வேண்டும். பள்ளிகளில்
பதிவு செய்யும் மாணவர்களுக்கு, மே 27-ஆம் தேதியிட்ட பதிவு மூப்பு
வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளி மாணவர்கள்
கல்வித்தகுதியை பள்ளிகளில் பதிவு செய்தபின், தங்களுக்கான முன்னுரிமையை வேறு
ஒரு வேலை நாளில் வேலைவாய்ப்பு அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டும் என
கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில்
செய்யப்பட்டுள்ள இணையதள வேலைவாய்ப்புப் பதிவு வசதியை மாணவ, மாணவியர்கள்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...