சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள், 27ம் தேதி வெளியாகிறது.
எனினும், சென்னை மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும், முன்கூட்டியே,
இன்று காலை வெளியாகலாம் என, பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த மார்ச்சில், பிளஸ் 2
தேர்வுகள் நடந்தன. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி,
மகாராஷ்டிரா, அந்தமான் -நிகோபார், கோவா ஆகிய மாநிலங்கள் அடங்கிய சென்னை
மண்டலத்தில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வை எழுதினர்.
இதன் முடிவுகளை, பல நாட்களாக, மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தமிழகத்தில், மாநில பாடத்திட்டத்தில் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
வெளியாகி, 20 நாட்களுக்கு மேல் ஆகின்றன. பொறியியல், மருத்துவம்
படிப்புகளில் சேர, கடந்த, 20ம் தேதி வரை, விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கலந்தாய்வு, விரைவில் துவங்க உள்ளது.
இதனால், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவை, மாணவர்கள், ஆவலுடன்
எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், வரும், 27ம் தேதி, பிளஸ் 2 தேர்வு
முடிவுகள் வெளியிடப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. மாணவர்கள்,
தேர்வு முடிவை, http://www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...