ஜூன் 20ம் தேதி கலை-அறிவியல் கல்லூரிகள் திறப்பு:
தமிழகத்தில் உள்ள கலை-அறிவியல் கல்லூரிகள் ஜூன் 20ம் தேதி திறக்கப்பட உள்ளன.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி
மாணவர்கள் மார்ச் 9ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தில்
உள்ள கலை அறிவியல் கல்லூரிகளுக்கு மார்ச் 15 முதல் காலவரையற்ற விடுமுறை
அறிவிக்கப்பட்டன.
அதன் பின்னர் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வுகள் துவங்கி மே இரண்டாவது
வாரம் முடியவுள்ள நிலையில், மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு
ஜூன் 20ம் தேதி கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன.
அரசு, அரசு சார்ந்த கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இந்தாண்டு
மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளன. மே 6ம் தேதி முதல் கல்லூரிகளில்
விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.