மே 27ம் தேதி பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்:
பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் திங்கள்கிழமை (மே 27)
வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே மாணவர்கள் தங்கள்
கல்வித் தகுதியை ஆன்-லைன் மூலமாக பள்ளிகளிலேயே பதிவு செய்யலாம் என
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியானது.
பள்ளிகளின் வழியே தேர்வு எழுதிய 7.99 லட்சம் பேரில் 7.04 லட்சம் பேர்
தேர்ச்சி பெற்றனர். அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் சான்றிதழ் மே 27-ல்
வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மதிப்பெண்ணை அச்சிடும் பணிகள் கடந்த
இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்தது. மதிப்பெண் சான்றிதழ்களை அந்தந்த மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை
தொடங்கியது. அனைத்துப் பள்ளிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை மதிப்பெண்
சான்றிதழ்கள் கிடைத்துவிடும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மதிப்பெண் சான்றிதழைப் பெறும்போதே வேலைவாய்ப்புக்காக தங்களது கல்வித்
தகுதியை மாணவர்கள் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே 27 முதல்
ஜூன் 10 வரை மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியைப் பள்ளிகளில் பதிவு
செய்துகொள்ளலாம். இவ்வாறு பதிவு செய்யும் மாணவர்களுக்கு மே 27-ஆம்
தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்
துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
பள்ளிகளிலேயே இணையதளம் மூலமாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ரேஷன்
அட்டை, ஜாதிச் சான்றிதழை உடன் எடுத்துச்செல்ல வேண்டும். அந்த அட்டையில்
பதிவுதாரரின் பெயர் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை
ஏற்கெனவே பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையையும் உடன்
எடுத்துச் செல்ல வேண்டும்.
புதிதாகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய பதிவு எண்ணுடன் கூடிய
அடையாள அட்டை உடனுக்குடன் வழங்கப்படும். மாற்றுத்திறனுடைய மாணவர்களாக
இருந்தால், அவர்கள் பள்ளிகளில் பதிவு செய்துவிட்டு முன்னுரிமையை மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேறொரு நாளில் பதிவு செய்துகொள்ள வேண்டும்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...