10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 31ம் தேதி(நாளை)வெளியீடு:
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை (31ம் தேதி), காலை, 9.15 மணிக்கு வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை பார்க்க முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 27ம் தேதி துவங்கி, ஏப்ரல், 12ம் தேதி வரை நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில், 3,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், 5,43,152 பேர் மாணவர்கள்; 5,25,686 பேர் மாணவியர் என, மொத்தம், 10 லட்சத்து, 68 ஆயிரத்து, 838 பேர் தேர்வு எழுதினர்.
"தேர்வு முடிவுகள், மே, 31ம் தேதி வெளியிடுப்படும்" என, இம்மாதம் முதல்
வாரத்திலேயே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள்
வெளியிடுவதற்கான பணிகளை முழு வீச்சுடன் அரசு தேர்வு துறை செய்து வருகிறது.
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், நாளை காலை, 9:15 மணியளவில்
வெளியாகிறது. அரசின் இணையதளங்களில் மட்டுமே தேர்வு முடிவுகளை பார்க்க
முடியும் என கல்வி துறை அறிவித்துள்ளது. www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய அரசு இணையதளங்களில் முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.
சென்னை மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை, கலெக்டர்
அலுவலக தரை தளத்தில் உள்ள மக்கள் குறை தீர்க்கும் மையத்திலும், ஐந்தாம்
தளத்தில் உள்ள தேசிய தகவல் மையத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என,
சென்னை கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்டத்தில்,
57,559 பேர், 10ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...