முதுகலை ஆசிரியர்கள் போட்டி எழுத்து தேர்வு: மே 31 முதல் விண்ணப்பம்:
முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வுக்குரிய விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வழங்கப்படுகிறது.2012-13ம் ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை 1 பணியிடங்களுக்கான போட்டி எழுத்து தேர்வு வரும் ஜூலை மாதம் 21ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை (31ம் தேதி) முதல் வரும் ஜூன் மாதம் 14ம் தேதி வரை முதன்மை கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம் 50 ரூபாயை ரொக்கமாக செலுத்தி பெற்று கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட அறிவுரையின்படி எந்தவித தவறுமின்றி ஓ.எம்.ஆர்
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து குறிப்பிட்ட தேர்வு கட்டண செலானுடன் முதன்மை
கல்வி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்று கொள்ள வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எக்காரணம் கொண்டும் தபால் மூலமாக
முதன்மை கல்வி அலுவலகத்திற்கோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கோ
அனுப்ப கூடாது. அவ்வாறு தபால் மூலம் அனுப்பபடும் விண்ணப்பங்கள் ஏற்றுக்
கொள்ளப்பட மாட்டாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலகங்களில் வரும்
ஜூன் மாதம் 14ம் தேதி மாலை 5.30 மணிக்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு
பின்னர் பெறப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட
மாட்டாது என்று முதன்மை கல்வி அலுவலர் காதர் சுல்தான் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...