பள்ளி வாகனங்களை பரிசோதிக்க 50 கண்காணிப்பு குழுக்கள்?
பள்ளி வாகனங்களில் விதிமுறைகள் முறையாக பின்பற்றுவது குறித்து, 50 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைத்து, போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.சென்னை, சேலையூரில் சிறுமி ஸ்ருதி, பள்ளி பேருந்தின் ஓட்டையில் இருந்து விழுந்து பலியானாள். இதையடுத்து, பள்ளி வாகனங்களை விபத்தில்லாமல் இயக்குவதற்கு, அரசு நடவடிக்கை எடுத்தது. ஓட்டுநருக்கு, ஐந்து ஆண்டு அனுபவம், உதவியாளர்கள், ஓட்டுநர் உரிமம் பெற்று இருப்பதுடன், குழந்தைகளை கையாளும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தை , மாதம் ஒருமுறை கூட்டி, வாகனங்கள்
பராமரிப்பு, ஓட்டுநர், உதவியாளர் குறித்து கருத்து கேட்க வேண்டும் என்பன
உள்ளிட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இதையடுத்து, விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது குறித்து,
போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். தற்போது கோடை
விடுமுறை முடியும் தருவாயில் உள்ள நிலையில், வரும், ஜூன், 3ம் தேதி
பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இதையடுத்து, பள்ளி வாகனங்களில் விதிமுறைகளை முறையாக பின்பற்றுப்படுவது
குறித்து, கண்காணிக்க போக்குவரத்து துறை, தீவிரமாக களம் இறங்கவுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும், அந்தந்த
பகுதியில் உள்ள ஆர்.டி.ஓ., தலைமையில், 50 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள்
அமைத்து, பரிசோதிக்கும் பணியை துவங்கவுள்ளோம். நாளை(இன்று), சென்னையில்
நடைபெறவுள்ள போக்குவரத்து அதிகாரிகள் மத்தியிலான ஆலோசனை கூட்டத்தில்,
இதுகுறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...