பொறியியல் விண்ணப்ப விற்பனை கடந்த ஆண்டைத் தாண்டியது:
பி.இ. சேர்க்கைக்காக மொத்தம் 2.33 லட்சம்
விண்ணப்பங்கள் நேற்று விற்பனையாகியுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர்
சேர்க்கைச் செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
கடந்த ஆண்டு மொத்தம் 2.28 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. இந்த
ஆண்டு விண்ணப்ப விற்பனைக்கு மேலும் 3 நாள்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டைவிட
கூடுதலாக 5 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன.
விண்ணப்ப விற்பனை மே 4-ம் தேதி தொடங்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவு
வெளியானதற்குப் பிறகு நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்துக்கும் அதிகமான
விண்ணப்பங்கள் விற்பனையாகி வருகின்றன.
இந்த ஆண்டும் விண்ணப்ப விற்பனை அதிகரித்துள்ளது மாணவர்கள்,
பெற்றோர்களிடையே பி.இ. மோகம் இன்னும் குறையவில்லை என்பதையே காட்டுவதாக
பொறியியல் பேராசிரியர்கள் தெரிவித்தனர்.
2.71 லட்சம் இடங்கள்: தமிழகத்தில் இப்போது 520 பொறியியல் கல்லூரிகளில்
மொத்தம் 2.68 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு 11 புதிய
பொறியியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுளளது. ஒவ்வொரு
கல்லூரிக்கும் தலா 300 இடங்கள் வீதம் 3,300 கூடுதல் இடங்கள்
அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மொத்த இடங்களின எண்ணிக்கை 2.71 லட்சமாக
அதிகரித்துள்ளது. இந்த இடங்களில் ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்காக சுமார் 2
லட்சம் இடங்கள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு
கலந்தாய்வில் 55 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் நிரம்பவில்லை. இந்த ஆண்டு
காலியிடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...