- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 19 May 2013

தட்டச்சுக்கு கோடையில் கூடுது மவுசு; பயிற்சி பெற மாணவிகள் அதிக ஆர்வம்:

கம்ப்யூட்டர் கீ போர்டில் வேகமாகவும், பிழையின்றி இயக்கவும் கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தில் டைப்ரைட்டிங் கற்பதில் மாணவியர் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.ஓலைச்சுவடி, கையெழுத்துக்குப்பின் ஒழுங்கான வடிவம், பல நகல்கள் எடுக்கும் வாய்ப்புடன் டைப் ரைட்டிங் இயந்திரம், அத்தனை இடங்களிலும் கால் பதித்தது. இதன் மூலம் கால விரயம், சுலபம், சிக்கனமாக டைப் ரைட்டிங் பணியை முடித்துக்கொண்டனர்.

தமிழ் தட்டச்சு பொறி, முத்தையா என்பவரால் கடந்த, 1936ல் வடிவமைக்கப்பட்டது. ஆங்கில தட்டச்சு பொறியை, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றிமில் என்பவர், 1714ல் கண்டுபிடித்தார். இன்றைய கம்ப்யூட்டர் உலகுக்கு அடிப்படையே இந்த தட்டச்சு இயந்திரம்தான். கம்ப்யூட்டரின் எழுத்து வடிவமும், டைப் ரைட்டிங்கில் உள்ளதாக இருப்பதால், டைப்ரைட்டிங் கற்றவர்கள், கம்ப்யூட்டர் இயக்குவதை மிகவும் சுலபமாக்கியது.
தற்போது, கோடை விடுமுறை என்பதால், தட்டெழுத்து விரல் பயிற்சி பெற மாணவ, மாணவியர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரோடு மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் செயலாளர் செந்தில் கூறியதாவது:
தட்டச்சு, கம்ப்யூட்டரின் விசைப்பலகையும் ஒன்று போல இருப்பதால், டைப்ரைட்டிங் தெரிந்தவர்கள், கம்ப்யூட்டரை பிழையின்றி, வேகமாக இயக்கலாம் என்பதால், இதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு தொழில்நுட்ப தேர்வு வாரியத்தால், ஆண்டுக்கு, இரு பருவங்களாக (ஃபிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) தேர்வு நடக்கிறது. 6ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள், புதுமுக இளநிலை தேர்வுக்கு செல்லலாம்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள், ஜூனியர் தேர்வுக்கு செல்லலாம். ஜூனியர் தேர்ச்சியடைந்தவர்கள், சீனியர் கிரேடு தேர்வுக்கு செல்லலாம். தமிழத்தில், 3,200க்கும் மேற்பட்ட அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் உள்ளன.
வக்கீல் அலுவலகங்கள், நீதிமன்றம், ஆப்செட் பிரிண்ட்டிங் உட்பட தனியார் நிறுவனங்களில் தமிழ் தட்டச்சு பயின்ற மாணவர்களுக்கு மிகுந்த வரவேற்பும், வருவாயும் உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு, ஒரு லட்சம் பேர் அரசு தட்டச்சு தேர்வு எழுதுகின்றனர்.
கம்ப்யூட்டர் இருக்கும் வரை தட்டச்சு கல்வி என்றும் அழியாது. டி.என்.பி.எஸ்.சி.,யில் தட்டச்சு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இளநிலை உதவியாளர் தேர்வில் தட்டச்சு முடித்தோருக்கு மார்க்கில் முன்னுரிமை உள்ளதால், தட்டச்சு கல்வி கற்பதில் மாணவர்களின் பங்கு அதிகரித்துள்ளது.
தட்டச்சு பாடம் சீனியர் கிரேடு தேர்வில், முன்பிருந்த பாடத்திட்டத்தை மாற்றி, தற்போது எளிமையான முறைக்கு அரசால் மாற்றப்பட்டு, வரும் ஆகஸ்ட், 2013 அரசு தட்டச்சு தேர்வு அமலுக்கு வர உள்ளது, என்றார்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H