10ஆம வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வெளியீடு:
சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் நடத்திய 10-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 5,00,000 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் www.cbse.nic.in, www.results.nic.in, மற்றும் www.cbseresults.nic.in ஆகிய இணைய தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், 011 - 2430 0699 என்ற IVRS
தொலைபேசி எண்ணுக்கு அழைத்தும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த சில ஆண்டுகளாக, மதிப்பெண்கள் வழங்குவதற்குப் பதிலாக கிரேடு வழங்கும்
முறையை பின்பற்றி வருகிறது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கான ப்ளஸ் 2
தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. இணையதளத்தில் காலை 10 மணிக்கு
தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறியலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...