எஸ்.எஸ்.எல்.சி., தனித்தேர்வு - ஜுன் 21, 22ம் தேதிகளில் ஹால்டிக்கெட்:
எஸ்.எஸ்.எல்.சி., சிறப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், தங்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை, ஜுன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள்
மண்டல துணை இயக்குநரால் அறிவிக்கப்படும் கல்வி மாவட்டங்களுக்குரிய
தேர்வுக்கூட விநியோக மையங்களுக்குச் சென்று இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஹால்டிக்கெட்டுகள், மாணவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி
வைக்கப்படமாட்டாது. ஹால்டிக்கெட் இல்லாத மாணவர்கள், தேர்வெழுத
அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும், தேர்வுக் கட்டணம் மற்றும் தகுதிக்கான சான்றுகளை, இதுவரை
சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில்
சமர்ப்பிக்காத தேர்வர்கள், ஹால்டிக்கெட் வழங்கும் மையத்தில், நேரில்
சமர்ப்பித்த பிறகே, அவர்களுக்கான ஹால்டிக்கெட் வழங்கப்படும்.