பொறியியல் கலந்தாய்வு முடிவு வெளியிட தடை:
அண்ணா பல்கலை பொறியியல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், விளையாட்டு பிரிவுக்கான முடிவை, வெளியிடாமல் நிறுத்தி வைக்க வேண்டும்" என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் சரண்யா
தாக்கல் செய்த மனு: நான் எறிபந்து விளையாட்டு போட்டியில், தேசிய அளவில்
தங்கப் பதக்கம் பெற்றுள்ளேன். இவ்விளையாட்டை மத்திய விளையாட்டுத் துறை
அமைச்சகம், இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகரித்துள்ளன. மருத்துவம்,
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தேன். விளையாட்டு வீரர்களுக்கான
இடஒதுக்கீட்டில், 730 மதிப்பெண் என்ற தகுதியை எட்டியுள்ளேன்.
சென்னை அண்ணா பல்கலையில், ஜூன் 14 ல், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.
எனது உண்மை சான்றிதழ்களை சமர்ப்பித்தேன். ஆனால், பல்கலை, ஜூன் 16 ல்,
வெளியிட்ட விளையாட்டு வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில், எனது பெயர் இல்லை.
என்னை கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்கவும், புதிய தரவரிசை பட்டியலை
வெளியிடவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எஸ்.மணிக்குமார் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்
வக்கீல் சண்முக ராஜா சேதுபதி ஆஜரானார். பல்கலை வக்கீல், "மத்திய விளையாட்டு
மற்றும் இளைஞர் நலத்துறையின் அங்கீகாரத்தை, இந்திய எறிபந்து கூட்டமைப்பு
பெறவில்லை. இதனால், மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை" என்றார்.
நீதிபதி, "மனுதாரரை கவுன்சிலிங்கில் பங்கேற்க, பல்கலை அனுமதிக்க
வேண்டும். மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை விளையாட்டு பிரிவுக்கான
கவுன்சிலிங் முடிவை வெளியிடாமல், நிறுத்தி வைக்க வேண்டும்" என
உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...