எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலில் குளறுபடி-தினமலர்
எஸ்.எஸ்.எல்.சி., மதிப்பெண் பட்டியலில், பல்வேறு குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு, வழங்கிய மதிப்பெண் பட்டியலை, திரும்பப் பெறுகின்றனர்.தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியல் பள்ளிகளில், வழங்கப்பட்டு வருகிறது. மதிப்பெண் பட்டியலில், தேர்வு பதிவு எண், பெயர், பிறந்த தேதி, தேர்வு எழுதிய மையம், புகைப்படம் மற்றும் பெற்ற மதிப்பெண்களின் விவரம் ஆகியவை, கம்ப்யூட்டரில் அச்சிட்டு, வழங்கப்படுகின்றன.
திருவாரூர் மாவட்டத்தில், வழங்கப்பட்ட மதிப்பெண்
பட்டியல்களில், சான்றிதழில் நேர் கோடு விழுந்துள்ளதால், பிறந்த தேதி
மற்றும் மதிப்பெண் விவரம், சரியாக தெரியவில்லை. இதனால், அவற்றை திருத்தி,
புதிய சான்றிதழ் பெற, உரிய பள்ளி தலைமை ஆசிரியர்கள், திரும்ப பெற்று
வருகின்றனர். இவை, மாவட்ட கல்வித் துறை மூலம், தேர்வுத் துறைக்கு
அனுப்பப்படுகின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...