குழந்தைகளிடம் எதிர்க்காலத்தில் நீ என்னவாக
விரும்புகிறாய் என்று கேட்டால், நான் மருத்துவராக வேண்டும்... நான்
பொறியாளராக வேண்டும்... என்பது தான் அவர்களின் முதல் பதிலாக இருக்கும்.
அப்படித்தான் சிறுவயதில் மருத்துவராக வேண்டும் என்ற கனவுகளுடன் பயின்று,
இன்று அந்த கனவு நினைவாகுமா என ஏக்கத்தில் காத்திருக்கிரார் ஒரு மாணவிகொல்லன் பட்டறையில் இரும்பு பிடிக்கும் இந்த
விரல்கள் புத்தகம் பிடித்து பழகியவை... கண்கள் நிறைய ஏக்கத்துடனும்,
சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடனும் படித்து பனிரெண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வில் 1077 மதிப்பெண்கள் பெற்று சாதித்தாள் இந்த பெண்.
ஆனால், குடும்ப வறுமை காரணமாக தற்போது கொல்லன் பட்டறையில் இரும்பு தூக்கி அடித்துக் கொண்டிருக்கிறாள். மருத்துவராக வேண்டும் என்ற ஆசையில் உள்ள இந்த பெண்ணுக்கு, மருத்துவப் படிப்பைத் தொடர பொருளாதாரம் மிகப்பெரும் தடையாக உள்ளது என்று மனம் வருந்துகிறாள் மாலதி.இது ஒருபுறம் இருக்க, விவசாயம் பாழ்பட்டு போனதால் தற்போது பண்ணைக் கருவி தயாரிக்கும் தொழில் நலிவடைந்து விட்டதாகக் கூறுகின்றனர் இவளது குடும்பத்தினர். இதனால், குடும்ப வருமானத்திற்கே வழி இல்லாத போது பேத்தியின் கனவை எப்படி நினைவாக்குவது என்ற வருத்தத்தில் உள்ளார் இவரின் தாத்தா பெரியசாமி.
இரவு பகலாக கண் விழித்து பயின்று,
மருத்துவராக வேண்டும் என்ற ஆசைகளுடன் காத்திருக்கும் மாலதியின் கனவு
கொல்லன் பட்டறை நெருப்பிலேயே கருவி விடக்கூடாது என்பதுதான் அனைவரின்
எதிர்பார்ப்பு...
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...