பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களின் கடமை பாடம்
சொல்லி தருவது மட்டும் தான்; மதிய உணவு சமைக்கும் முறையை அவர்கள்
கண்காணிக்க தேவையில்லை என அலகாபாத் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பீகாரில்
கடந்த வாரம் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியான சம்பவம்
தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அலகாபாத் ஐகோர்ட் இதனை தெரிவித்துள்ளது.
ஐகோர்ட் விளக்கம் :
ரசாயன பொருள் கலந்த விஷத்தன்மை உள்ள உணவை சாப்பிட்டு பீகாரில் 23
குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பீகாரில் சுமார் 3 லட்சம் பள்ளி
ஆசிரியர்கள் மதிய உணவு திட்டத்தை புறக்கணித்துள்ளனர். இந்த விவகாரத்தின்
எதிரொலியாக உத்திர பிரதேசத்தின் மீருட் பகுதியைச் சேர்ந்த பிரதானச்சாரியா
பரிஷித் என்ற அமைப்பின் சார்பில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் சிவ கீர்த்தி சிங், விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய
பெஞ்ச் விசாரித்தது. அதன் பின்னர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றம்
ஆசிரியர்களின் கடமை மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தருவது மட்டுமே; மதிய உணவு
திட்டத்தின் கீழ் உணவு தயாரித்தலை கண்காணிப்பது அல்ல என தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மதிய உணவு திட்டத்தை அமல்படுத்த அதிருப்தி
அடைந்துள்ளது தேவையற்றது எனவும் கோர்ட் தெரிவித்துள்ளது.
மனுவில் கோரிக்கை :
பிரதானச்சாரியா பரிஷித் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,
அரசு சாரா அமைப்புக்கள் பள்ளிகளில் மதிய உணவை தயாரிக்கும் பொறுப்பை
ஒப்படைக்கக் கூடாது எனவும், இதனை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களின்
தனிப்பட்ட நேரடி கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின் பேரில் மதிய உணவு
தயாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்
ஆசிரியர்களின் புதிய கடமைகள் குறித்தும், மதிய உணவு திட்டத்தில் அரசு சாரா
அமைப்புக்களை அனுமதிப்பது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் குறித்தும்
கோர்ட் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டள்ளது.
நீதிபதிகள் உத்தரவு :
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்; மதிய
உணவு தயாரித்தல் போன்ற முக்கிய பணிகளை யாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே
அரசு தான் தீர்மானிக்க வேண்டும்; மதிய உணவ திட்டத்தின் கொள்கைகள் குறித்து
அரசு விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்; இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணை
ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெறும்; அன்றைய தினம் அரசு, கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
செய்ய வேண்டும்; மறு உத்தரவு வரும் வகையில் மதிய உணவு தயாரிக்கும்
பொறுப்பை அரசு சாரா அமைப்புக்களை மேற்கொள்ளும். இவ்வாறு நீதிபதிகள்
பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. பீகாரில் மதிய உணவு திட்டத்தை
கண்காணிக்கும் பொறுப்பை ஆசிரியர்கள் புறக்கணித்துள்ளது குறித்து சுப்ரீம்
கோர்ட்டில் பீகார் அரசு தெரிவித்துள்ளது. எவ்வாறு மதிய உணவு திட்டத்தை
அமல்படுத்துவது குறித்து வழிகாட்ட வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டை
பீகார் அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...