துணை மருத்துவப் படிப்புகளில் 5,730 காலியிடங்கள்:
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 5730 காலியிடங்கள் மட்டுமே உள்ளன.2013- 2014-ஆம் கல்வியாண்டுக்கான பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பி.எஸ்சி. ரேடியாலஜி மற்றும் இமேஜிங் தொழில்நுட்பம், பி.எஸ்சி. ரேடியோதெரபி தொழில்நுட்பம், பிஸியோதெரபி உள்ளிட்ட ஏழு படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி தொடங்கியது.
இந்தப் படிப்புகளுக்காக 13 அரசுக் கல்லூரிகளில் மொத்தம் 475 இடங்களும்
197 தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் 6,829 இடங்களும்
இருந்தன.
கலந்தாய்வின் நான்காவது நாளான வியாழக்கிழமை 800 பேர்
அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 480 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
கலந்தாய்வின் முடிவில் இரண்டு அரசு இடங்களும் தனியார் கல்லூரிகளில் உள்ள
455 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் பூர்த்தியாகின.
2 இடங்கள் மட்டுமே... அரசு கல்லூரிகளில் திருச்சி அரசு கல்லூரியில்
பிஸியோதெரபி படிப்புக்கு (பழங்குடியின பிரிவினருக்கு) ஓர் இடமும், மதுரை
கல்லூரியில் பி.பார்ம் படிப்புக்கு (தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு) ஓர்
இடமும் மட்டுமே காலியாக உள்ளன. மீதம் உள்ள 473 அரசு இடங்களும்
பூர்த்தியாகிவிட்டன. இது தவிர தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் 5,728
இடங்கள் காலியாக உள்ளன.
தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 3-ஆம் தேதி வரை
கலந்தாய்வு நடைபெறும். ஆகஸ்ட் 26, 27, 28 தேதிகளிலும்
ஞாயிற்றுக்கிழமைகளிலும் கலந்தாய்வு நடைபெறாது என்று தமிழ்நாடு மருத்துவக்
கல்வி இயக்குநரக தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...