"கல்விக்கடன் பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் அவசியம்"
"கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், வங்கியில் கடனை திருப்பி செலுத்துவதற்கு வசதியாக, வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும்" என, எம்.பி., பேசினார்.அறிஞர் அண்ணா அரங்கத்தில் நடந்த விழாவிற்கு, காஞ்சிபுரம் லோக்சபா உறுப்பினர் விஸ்வநாதன் தலைமை தாங்கி, 261 கல்லூரி மாணவ, மாணவியருக்கு 5.4 கோடி ரூபாய் மதிப்பில் கல்விக் கடன்களை வழங்கி பேசியதாவது:
இந்தியாவின் கல்வி வளர்ச்சிக்காக, இதுவரை, 25 லட்சம்
மாணவர்களுக்கு, 52 ஆயிரம் கோடி ரூபாயில், கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவை தவிர, மத்திய அரசு சார்பில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், படித்த
இளைஞர்களுக்கு, இலவச தொழிற் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன் மூலம்,
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் எளிதில் கிடைக்கிறது.
கல்விக்கடன் பெற்ற மாணவர்கள், வங்கியில் கடனை திருப்பி
செலுத்துவதற்கு வசதியாக, மத்திய அரசுடன், மாநில அரசு இணைந்து, படித்த
இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்களை உருவாக்க வேண்டும். இதன் மூலம்,
கல்விக் கடனை வங்கிகளில் செலுத்துவதற்கு சுலபமாக இருக்கும்." இவ்வாறு, அவர்
பேசினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...