டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளிகளுக்கு 10 கட்டளைகள்:
மாணவர்களை டெங்கு மற்றும் வைரஸ்
காய்ச்சல் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பள்ளிகளுக்கு
கல்வித்துறை 10 கட்டளைகளை பிறப்பித்துள்ளது. மதுரையில் கடந்த 3
நாட்களுக்கு
முன்னர் பள்ளி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தார். இதையடுத்து
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள்
ஆளுகைக்கு உட்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்ப வேண்டிய சுற்றறிக்கையை பள்ளி
கல்வித்துறை வழங்கியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
*மழை காலம் துவங்க இருப்பதால் பள்ளி
வளாகத்தில் தண்ணீர் தேங்கும் அளவிலான பள்ளங்கள் இல்லாதவாறு நடவடிக்கை எடுக்க
வேண்டும். குடிநீர் தொட்டி, கழிவுநீர் தொட்டி திறந்த நிலையில் இருக்கக் கூடாது. *கழிவறைகளை
தினமும் முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.
*பயனில்லாத திறந்தவெளி கிணறுகள்
இருந்தால் அவற்றை உடனே மூட வேண்டும்.
*பள்ளி அருகே திறந்தவெளி கழிவுநீர்
கால்வாய்கள் இருப்பின் சுகாதாரத் துறையினரை அணுகி கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா மற்றும்
பிற வைரஸ் காய்ச்சல்கள் தாக்காமல் மாணவர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும்
என்பது குறித்து இறைவணக்கத்தின் போது மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த
வேண்டும்.
*பள்ளி வளாகத்தில் உபயோகமற்ற
பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் இருப்பின் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க
தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
*பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை, தாழ்வாரங்களில்
தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து
வந்தால், அதற்காக நீண்ட நாட்களாக தண்ணீரை தேக்கி வைக்காமல், அவ்வப்போது
தேவையான அளவு தண்ணீரை பயன்படுத்தி அப்பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
*பள்ளிகளின் வெளிப்புறம் பயன்படுத்தாத
கிணறுகள், நீர்தேக்கங்கள் இருந்தால் அந்த விபரங்களை சுகாதாரத் துறைக்கு
தெரியப்படுத்தி தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
*வீடுகளில் டயர், தேங்காய் ஓடு, மாவரைக்கும் கல், குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழைநீர் தேங்கி இருந்தால், ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...