"டி.டி., மருத்துவ கல்லூரி மாணவர்களை அரசுக் கல்லூரியில் சேர்க்க முடியாது"
"டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளும் அளவுக்கு பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் பெறவில்லை" என, மருத்துவத் துறை கூறியுள்ளது.இதுகுறித்து, மருத்துவத் துறை துணை இயக்குனர், முடிசூட பெருமாள் கூறியதாவது: சர்ச்சைக்குரிய டி.டி., மருத்துவக் கல்லூரியில், 2010 - 11ல் சேர்க்கப்பட்ட மாணவர்கள், பிளஸ் 2 தேர்வில் போதிய மதிப்பெண் பெறவில்லை. மருத்துவக் கல்வியில் சேர 60 சதவீத மதிப்பெண் தேவை.
ஆனால், 2010 - 11ல் டி.டி., மருத்துவக் கல்லூரியில்
சேர்க்கப்பட்ட 150 பேரில் 72 பேர் 50 சதவீதத்துக்கும் குறைவான மதிப்பெண்
பெற்றுள்ளனர். 48, 49, 49.5 என்ற சதவீதத்தில் தான் இவர்களது மதிப்பெண்
உள்ளது. மீதமுள்ள 78 பேரின் மதிப்பெண், அரசு மருத்துவக் கல்லூரி ரேங்க்
பட்டியிலில் கடைசி இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில், இவர்களை அரசு மருத்துவக் கல்லூரியில்
சேர்த்துக் கொள்ள முடியாது. இவர்களை, அரசு மருத்துவக் கல்லூரியில்
சேர்த்தால், இவர்களுக்கு மேல் மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக்
கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்களுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.
எனவே, டி.டி., மருத்துவக் கல்லூரி மாணவர்கள், வேறு
படிப்புகளை தேர்வு கொள்வதே, அவர்களது எதிர்காலத்துக்கு நல்லது. இவ்வாறு,
முடிசூட பெருமாள் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...