- KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Monday 23 September 2013

மிக உயரத்தில் உள்ள மாணவியர் விடுதி: ஒரே கட்டிடத்தில் 100 பேர் தங்கும் அவலம்-DINAMALAR

அரசுக் கல்லூரியில் படிக்கும் பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவியர் தங்கும் விடுதி, சேலத்தில் தனியார் கட்டிடத்தில் மிக உயரமான மாடியில் உள்ளது. இங்கு, ஒரே இடத்தில் 100 பேர் தங்கியிருப்பது மாணவியருக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டத்தில் 16 பிற்பட்டோர் நல விடுதி, 30 மிகவும் பிற்பட்டோர் விடுதி என, மொத்தம் 46 விடுதி உள்ளது. அவற்றில், 34 மாணவர் விடுதி, 12 மாணவியர் விடுதியுமாகும். நான்காம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர், அரசு கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர், விடுதிகளில் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.


அவர்களுக்கு, இலவச சாப்பாடு, தங்குமிடம், சிறப்பு புத்தகம், பாய் மற்றும் போர்வை, நூலகம், விளையாட்டு சாதனம், சோப்பு, டூத் பேஸ்ட், எண்ணெய் முதலியவை இலவசமாகவே வழங்கப்படுகிறது.

சேலம், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில், எட்டு கல்லூரி மாணவியர் விடுதி உள்ளது. சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலைக்கல்லூரி, கோரிமேடு அரசு மகளிர் கல்லூரியில், 400க்கும் மேற்பட்ட மாணவியர் பட்ட மேற்படிப்பு படித்து வருகின்றனர்.

தர்மபுரி, விழுப்புரம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வெளிமாவட்ட மாணவியரும் படிக்கின்றனர். அரசுக்கு சொந்தமான விடுதி இல்லாததால், மாவட்ட நிர்வாகம், சேலம் சீரங்காபாளையத்தில், மிகவும் பிற்பட்டோர் நல மாணவியர் விடுதியை, தனியார் கட்டிடத்தில் அமைத்துள்ளது.

அந்த கட்டிடத்தில், 100 மாணவியர் வரை தங்கியிருந்து படிக்கின்றனர். ஒரு வார்டன், இரு சமையலர், ஒரு வாட்ச்மேனும் அங்கு பணியில் உள்ளனர். ஒரே இடத்தில், 100 மாணவியர் தங்கியிருப்பது, அவர்களை கடும் சிரமத்துக்குள்ளாக்கி உள்ளது. கழிவறை வசதி, உணவு, உறக்கம் போன்றவற்றில் இடையூறு உள்ளது.

உயரமான மாடி பகுதியில், மாணவியர் தங்கியுள்ளதால், பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக கூறப்படுகிறது. எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் நிதியில் இருந்து மாணவியர் விடுதியை அமைத்து கொடுக்கலாம். ஆனால், சேலம் மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சியினர், அதற்கான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மாணவியரும், மூன்று ஆண்டு கால படிப்பை, அவதிக்குட்பட்டே முடித்து செல்கின்றனர்.

அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு கல்லூரி மாணவியர் விடுதி புதிதாக கட்டுவதற்கு, அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். அதற்கான இடமும் தேர்வு செய்து வருகிறோம். தற்போது, சீரங்கபாளையம் விடுதியில், 100 பேர் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுத்துள்ளோம். மாணவியர் சிரமமின்றியே படித்து வருகின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் வழங்கி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H