புத்தி சாதுரியத்துடன் நூறு சதம் உழைத்தால் வெற்றி உறுதி:
தன்னம்பிக்கை, விடா முயற்சி, தொடர் உழைப்பு, மற்றவரை மதிக்கும் பண்பு, புத்திசாதுரியத்துடன் நூறு சதம் உழைத்தால் வெற்றி உறுதி" என, கல்லூரியில் நடந்த தன்னம்பிக்கை பயிலரங்கில் மாணவிகளுக்கு வசந்தகுமார் அறிவுரை வழங்கினார்.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் இன்னோவேசன் இன்குபேட்டர் (ஐ2) சார்பில், தன்னம்பிக்கை பயிலரங்கம் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வசந்த் அண்ட்
கோ உரிமையாளரும், வெற்றிப்படிக்கட்டுகள் புத்தக ஆசிரியருமான வசந்தகுமார்,
"வீழ்ந்தாலும் எழுவோம், வெல்வோம்" என்ற தலைப்பில் பேசியதாவது:
"வரலாற்றில் 14 வயதில் தன்னம்பிக்கை மூலம் அரசனாக பதவியேற்ற
அலெக்சாண்டர் உலகத்தில் உள்ள நாடுகளை கைப்பற்றி பெரும் சாம்ராஜ்யம் அமைக்க
விரும்பினார். ஒவ்வொரு நாடாக கைப்பற்றி இந்தியாவுக்குள் வந்தபோது
புருஷோத்தமன் என்கிற போரஸ் மன்னனிடம் வென்று விசாரணை நடந்தது.
அப்போது அலெக்சாண்டர் போரஸிடம் உன்னை எப்படி நடத்த வேண்டும்
என விரும்புகிறாய்? என கேட்டபோது ஒரு மன்னனைப் போல் நடத்த வேண்டுமென
புத்தி சாதுரியத்துடன் போர் புரியாமலே மீண்டும் போரஸ் தன்னாட்டுக்கு
மன்னனானான்.
நெப்போலியனும், சிறைபட்டிருக்கும் போது அந்த சிறையிலிருந்து
தப்பிக்க முயற்சி செய்யாமல் இறந்தான். அதன்பின் சிறையிலிருந்த பொருளை ஏலம்
விடும்போது அதில் தப்பிக்கும் வழி பற்றிய வரைபடம் இருந்தது.
இதன் மூலம் தன்னம்பிக்கை, விடா முயற்சி, தொடர் உழைப்பு,
மற்றவரை மதிக்கும் பண்பு, புத்திசாதுரியத்துடன் நூறு சதம் உழைத்தால் வெற்றி
உறுதி என்பதை அறியலாம்.
காந்தி, நேரு, காமராஜர் உள்ளிட்ட இந்திய தலைவர்களும்
கல்விக்காகவும் எடுத்துக்கொண்ட செயலில் வெற்றி பெறவும் அரும்பாடுபட்டு
உழைத்தனர்.
நான்காம் வகுப்பு படித்த வி.ஜி.பி., சென்னையில் முதலில்
பொழுதுபோக்கு பூங்காவான கோல்டன் பீச் அமைத்தார். வெறும் 70 ரூபாய்
சம்பளத்தில் வாழ்க்கையை துவங்கிய நான் இன்று வசந்த் அண்ட் கோ என்ற
நிறுவனத்தை 56 கிளைகளுடன் நடத்துகிறேன்.
எனவே, தோல்வியுற்றாலும் அதிலிருந்து பாடம் கற்று மீண்டும் வெல்ல முடியும்." இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...