10,12ஆம் வகுப்பு உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு:
"விருதுநகர் மாவட்டத்தில், குழந்தைத்தொழிலாளர் திட்ட பயிற்சி மையங்களில் பயின்று, முறைசார் பள்ளியில் 10,12ம்வகுப்பு முடித்து, உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு 2013-2014ம் ஆண்டிற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது," என,கலெக்டர் ஹரிஹரன் கூறினார்.அவரது அறிக்கை: மாவட்டத்தில் இன்ட்ஸ் / ஐ.எல்.ஓ., குழந்தைத்தொழிலாளர் திட்டம் மற்றும் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் படித்து, முறைசார் பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தொடர்ந்து தொழில்நுட்ப கல்லூரி, தொழில்பயிற்சி நிலையம், இளங்கலை பட்டம், பொறியியல் படிப்பு மற்றும் மருத்துவம் ஆகிய மேற்படிப்பினை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசு, மாதம்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை வழங்கிவருகிறது.
2013-2014 கல்வி ஆண்டிற்கான உதவித்தொகைகோரி, தகுதியுள்ள
மாணவ,மாணவியர், திட்ட இயக்குனர், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம்,
கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் -626 002 என்ற முகவரிக்கு,
செப்.,30க்குள் தெளிவான முகவரி, சிறப்புப்பள்ளியில் படித்த ஆண்டு,
உயர்கல்வி படித்த விவரம், படிக்கும் கல்வி நிறுவன பெயர் மற்றும் முகவரி
அடங்கிய முழுவிவரத்தை, அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...