தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் சார்பில் சென்னையில் 25 முதல் தொடர் மறியல்:
மத்திய இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை
வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கக் கல்வி
ஆசிரியர்கள் சார்பில் சென்னையில் செப்டம்பர் 25 முதல் தொடர் மறியல்
போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடுதொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெறும் இந்தப்
போராட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளதாக
அந்த
அமைப்பின் தலைவர் கோ.காமராஜ், பொதுச்செயலாளர் ந.ரங்கராஜன் ஆகியோர்
தெரிவித்தனர். பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு முழுமையான
ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது. இப்போது, சென்னையில்
தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
முடிவின்படி, சென்னை மன்றோ சிலையில் இருந்து கோட்டையை நோக்கி தினந்தோறும்
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணியாகச் செல்ல உள்ளனர்.








