சட்டசபையில் முதல்வர் அறிவித்தபடிதமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகள்உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு அரசு ஆணை வெளியீடு:
சட்டசபையில் முதலமைச்சர்' அறிவித்ததற்கேற்ப தமிழ்நாட்டில் 50 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்
பள்ளிக் கூடங்களாக தரம் உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசு பிறப்பித்துள்ள ஆணை வருமாறு:- ஜெயலலிதா அறிவிப்புதமிழ்நாடு
சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சரால் 15-5-2013 அன்று,
‘‘உயர்நிலைப் பள்ளிகளை பொறுத்தவரையில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் ஓர்
உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், மத்திய
அரசால் நிதியுதவி அளிக்கப்படாத நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி, மாநில
நிதியில்
இருந்து 2013-2014-ம் கல்வி ஆண்டில் 50 நடுநிலைப் பள்ளிகள்
உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக்கொள்கிறேன். உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர்
பணியிடம் வீதம் 50 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும்
உயர்நிலைப் பள்ளி ஒன்றுக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 300 பணியிடங்கள்
தோற்றுவிக்கப்படும்’’ என்று அறிவித்தார். அதன்படி பின்வருமாறு அரசு ஆணையிடுகிறது:- உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்வு*
5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாத பகுதிகளில் 50
நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. *
தரம் உயர்த்தப்படும் 50 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர்
பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்
தோற்றுவிக்கப்படுகிறது. மேலும், தரம் உயர்த்தப்படும் 50 நடுநிலைப் பள்ளி
தலைமை ஆசிரியர் பணியிடங்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக
நிலை உயர்த்தப்படுகிறது. தலைமை ஆசிரியர் பணியிடம் தோற்றுவிப்பு*
50 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்படும் போது நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 1
முதல் 5 வகுப்புகள் தொடக்கப் பள்ளிகளாக நிலையிறக்கம் செய்யப்படுவதால்,
அப்பள்ளிகளுக்கு தலா ஒரு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம்
50 தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகிறது. காஞ்சீபுரம்
மாவட்டத்தில் குன்றத்தூர் ஒன்றியம் கொளப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்
பள்ளி, இலத்தூர் ஒன்றியம் நீலமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,
திருள்ளூர் மாவட்டத்தில் வில்லிவாக்கம் ஒன்றியம் கரலப்பாக்கம் ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகியவை உயர்நிலைப் பள்ளிகளாக தரம்
உயர்த்தப்படுகின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...