மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல:
ஆசிரியர் தகுதித்தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்ச்சி
மதிப்பெண்களை குறைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
போராட்டம்
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச்
சேர்ந்தவர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம்
மற்றும் மறியல் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
பார்வையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் ஏற்க முடியாதவையோ அல்லது அதிக
செலவு பிடிப்பவையோ அல்ல. பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்வில்
தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்களை பார்வையற்றவர்களுக்கு மட்டும் 60
விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காடாக குறைக்க வேண்டும் – மற்ற அரசு
வேலைவாய்ப்புகளில் பார்வையற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் –
உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது தான்.
தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க வேண்டும்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண்களைப் பொறுத்தவரை,
ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் சமூகச் சூழலுக்கு ஏற்ற வகையில் தேர்ச்சி
மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று
தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி ஆந்திராவில்
மாற்றுத் திறனாளிகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்ணாக 35 சதவீதம் மட்டுமே
நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் தமிழ்நாட்டிலும் தேர்ச்சி மதிப்பெண்களை குறைப்பதில் சட்ட
சிக்கலோ அல்லது வேறு பிரச்சினையோ ஏற்படப் போவதில்லை. வாழ்வாதாரம் கோரி
போராடும் பார்வையற்ற பட்டதாரிகள் மற்றும் மாணவர்களை முதல்–அமைச்சர்
ஜெயலலிதா உடனடியாக அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற
வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...