Best TET Coaching Center n Chennai
இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
பள்ளிக்கூடங்களுக்கு
கல்வி கட்டணம் நிர்ணயிக்கும்போது அந்தந்த பள்ளிகளின் பெற்றோர்களையும்
அழைத்து கருத்து கேட்கவேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் நீதிபதி
சிங்காரவேலுவிடம் மனுகொடுத்தனர்.கல்வி கட்டண கமிட்டி தமிழ்நாட்டில்
உள்ள தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி
சிங்காரவேலு தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி செயல்படுகிறது. இந்த கமிட்டி
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் உள்ளது.இந்த
கமிட்டியிடம்
நேற்று தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச்சங்க தலைவர் அருமைநாதன்
தலைமையில் சென்னையில் உள்ள சில பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்களின் பெற்றோர்கள்
சேர்ந்து மனு கொடுத்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-பெற்றோர் கருத்தை கேட்கவேண்டும்தனியார்
பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யும்போது பள்ளிகளின் உள் கட்டமைப்பு,
வசதிகள், போன்ற விவரங்கள் கேட்டுப்பெறப்படுகின்றன. அவ்வாறு
பள்ளிகள்சார்பில் தரும் விவரங்கள் அனைத்தும் உண்மைதானா? அவைகள் மாணவர்களின்
பயன்பாட்டில் உள்ளனவா? என்பதை தெரிந்து கொள்ள சம்பந்தப்பட்ட பள்ளிகளின்
பெற்றோர்களின் கருத்தை கேட்பதில்லை.பெற்றோரின் கருத்தை கேட்காமல்
ஒரு நபரின் கருத்தை மட்டும் கேட்டு கட்டணம் நிர்யணம் செய்வது இயற்கை
நியதிக்கு முற்றிலும் முரணானது. எனவே இதற்கு சட்டத்தில் வசதி
செய்யப்படவில்லை என்றாலும் கட்டணம் நிர்ணயிக்கும்போது பெற்றோர்களின்
கருத்தையும் கேட்டு அறியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து நீதிபதி சிங்காரவேலு கூறியதாவது:-பெற்றோர் கருத்து கேட்கப்படும்பள்ளிகளுக்கு
கட்டணம் நிர்ணயிக்கும் போது பெற்றோர்களிடம் கருத்து கேட்க சட்டத்தில்
இடம் இல்லை என்றாலும் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கும்போது
பெற்றோர்களின் கருத்தும் இனிமேல் கேட்கப்படும். கமிட்டி நிர்ணயித்த
கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பள்ளிகள் மீது புகார் வந்தால்
கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே தமிழ்நாட்டில் 10 ஆயிரத்து 800
பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதில் ஆவணம் சமர்பிக்காத
பள்ளிகளுக்கு அவர்கள் ஆவணம் சமர்ப்பித்ததற்கு ஏற்ப மட்டுமே கட்டணம்
நிர்ணயிக்கப்பட்டது. இப்போது 135 பள்ளிகள் ஆவணம் சமர்பித்துள்ளன. அந்த
பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆவணம்
சமர்பித்தவர்களுக்கு அதற்கு ஏற்றபடி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.பல
பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பிப்பதற்காக இயக்குனரகங்களில்
விண்ணப்பித்துள்ளன. அந்த பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அந்த பள்ளிகள் அங்கீகாரம் புதுப்பித்தபிறகுதான் கட்டணத்தை வசூல்
பண்ணமுடியும். இவ்வாறு நீதிபதி சிங்காரவேலு தெரிவித்தார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |