500 ஆண்டுகள் ஆனாலும் அழியாத சிடி, டிவிடிகளை வீணாக்க வேண்டாம்:
தற்போது அத்தியாவசிய பயன்பாட்டிலுள்ள "சிடி" மற்றும் "டிவிடி"க்கள் 500 ஆண்டுகளானாலும் அழியாது என்பதால் அதுகுறித்த விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்த கோவில்பட்டியில் நான்கு நாட்கள் கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதற்காக பள்ளிகளில் மற்றும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் பயன்படாத சிடி மற்றும் டிவிடிக்களை போட்டு ஒத்துழைக்குமாறு ஆலோசனைக் கூட்டத்தில் சப்-கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவில்பட்டி நகராட்சி, வனத்துறை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் மேம்பாடு ஏற்படுத்தவும், கோவில்பட்டி நகரை தூய்மையாக்கவும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்கில் "கோவில்பட்டி என்விரோன்மென்ட் லீக்" என்ற கே.இ.எல். அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு கோவில்பட்டி சப்-கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகிக்கிறார். இவரது தலைமையின் கீழ் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர் நிகழ்ச்ச்சியாக எலக்ட்ரானிக்ஸ் வேஸ்ட் பொருட்கள், சிடி மற்றும் டிவிடிக்களால் ஏற்படும் தீமைகள், அதுகுறித்து விழிப்புணர்வாக இருக்க வேண்டியதன் அவசியம் சம்பந்தமாக வரும் 12ந் தேதி முதல் 15ந் தேதி வரை விழிப்புணர்வு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதற்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஆபிசில் சப்-கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடந்தது.