சிறப்பு காவல் இளைஞர் படை தேர்வு கடினமாக இருந்தது:
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை எழுத்துத் தேர்வு எழுதியவர்கள் கூறுகையில்,"டிகிரி படித்தவர்கள் பதிலளிக்கும் வகையில் தான் பெரும்பாலான கேள்விகள் இருந்தன. பத்தாம் வகுப்பு தேறியவர்கள் 50 மார்க் எடுக்கலாம்" என்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 360 பேரை தேர்வு செய்வற்கான எழுத்து தேர்வு 5 மையங்களில் நேற்று நடந்து. தேர்வுக்கு 3 ஆயிரத்து 730 பேர் விண்ணப்பித்தனர். 3 ஆயிரத்து 418 பேர் தேர்வெழுதினர். சென்னை தலைமையிட டி.ஐ.ஜி., நாகராஜன் தலைமையில் போலீசார் மையங்களை ஆய்வு செய்தனர்.
வினாத்தாளில் கேட்டிருந்த முதல் 5 கேள்விகளுக்கு அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டும் பதிலளிக்க முடிந்தது. கணிதம், சமூக அறிவியல், அறிவியல் பொது அறிவு, கேள்விகள் இடை, இடையே கேட்கப்பட்டிருந்தன. 86 முதல் 100 வரை கோடிட்ட இடம் நிரப்பு, வார்த்தைகளுக்கு பொருள் கேட்டு ஆங்கில வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன.
ஆடதி பொருள் தருக என 63வது கேள்வியாக கேட்கப்பட்டு ஆறு, அருவி, கடல், மலை என, 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இதற்கு சரியான பதில் தெரியாமல் ஏராளமானோர் திணறினர். தேர்வு எழுதியவர்கள் கூறுகையில்," டிகிரி படித்தவர்கள் பதிலளிக்கும் வகையில் தான் பெரும்பாலான கேள்விகள் இருந்தன. பத்தாம் வகுப்பு தேறியவர்கள் 50 மார்க் எடுக்கலாம்" என்றனர்.