கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்த குழு அமைப்பு:
கிராமப்புறங்களில் விளையாட்டு போட்டிகளை நடத்த கலெக்டர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
மாவட்ட அளவிலான விளையாட்டு ஆலோசனை கூட்டம், உள் விளையாட்டு
அரங்க செயற்குழு கூட்டம் கலெக்டர் வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. கிராம
ஊராட்சிகளில் விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக கலெக்டர், எஸ்.பி., உட்பட
9 அரசு அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டது.
முதற்கட்டமாக மாவட்டத்தில் 76 கிராம ஊராட்சிகளில் போட்டிகள்
நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கபடி, கால்பந்து, தடகளம், கையுந்து பந்து
போட்டிகள் நடத்தப்படும்.
மாற்று திறனாளிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் தனி
போட்டிகள் இடம் பெறும். அந்தந்த பகுதிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள்,
தங்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நாள்தோறும் குறைந்தது ஒரு மணி நேரம்
பயிற்சியளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
கிராமப்புற மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் மாவட்ட
விளையாட்டு அரங்கில் இரண்டு பூப்பந்து மைதானங்கள் புதிதாக அமைப்பதற்கான
முயற்சி துவக்கப்பட்டுள்ளது.