பெரியார் பல்கலையில் கல்லூரி ஆசிரியர்களுக்கு பயிற்சி:
பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கு, டாடா கன்சல்டன்சி நிறுவனம் மூலம், ஐந்து நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.சேலம் பெரியார் பல்கலையின், பாடத்திட்ட வளர்ச்சி மையமும், வாழ்வியப்பணி வழிகாட்டி மற்றும் பணியமர்த்தல் மையமும், டாடா கன்சல்டன்சி நிறுவனத்துடன் இணைந்து இணைவு பெற்ற கல்லூரி ஆசிரியர்களுக்கு, கேம்பஸ் கார்பரேட் குறித்து, ஐந்து நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.
திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், நவம்பர், 11 (இன்று) முதல், 15ம் தேதி வரை நடக்கவுள்ள இப்பயிற்சியில், கேம்பஸ் கார்பரேட் பாடத் திட்டம் குறித்து விளக்க, மும்மை மொமைன் அகாடமி தலைவர் இந்து ராமகிருஷ்ணன், பேங்கிங் பினான்சியல் சர்விசஸ் ஆனந்த் சவுதான், அமிசாக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இப்பயிற்சியில், 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். டாடா கன்சல்டன்சி நிறுவனம், பெரியார் பல்கலை கல்லூரி ஆசிரியர்களுக்காக, வேலைவாய்ப்புக்கான பயிற்சியும், ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கி வருகிறது.