தபால் தலை வடிவமைப்பு; நவ., 17ல் ஓவிய போட்டி:
தபால் தலை வடிவமைத்தல் குறித்த ஓவியப் போட்டி, வரும் 17ம் தேதி ஒன்று முதல், ப்ளஸ் 2 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை நடக்கிறது.
ஈரோடு மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு, அஞ்சல் கோட்டம் சார்பில் இப்போட்டி, ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் காலை 10 முதல் 11 மணி வரை நடக்கிறது. இப்போட்டி, மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரையும், ஐந்து முதல், எட்டாவது வரையும், 9 முதல் ப்ளஸ் 2 வரை, மூன்றாவது பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
"எனது தாத்தா பாட்டிகளுடன் ஒருநாள்" என்ற தலைப்பில் போட்டி நடக்கிறது. கோவை மண்டல அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவர்.
தேசிய அளவில் தேர்வு செய்யப்படும் சிறந்த வடிவமைப்பு, நினைவு தபால் தலைகளாகவோ, முதல் நாள் தபால் உறைகளாகவோ வெளியிட பரிந்துரைக்கப்படும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள், தங்கள் பெயர், பிறந்த தேதி, பயிலும் வகுப்பு, குறிப்பிடப்பட்ட பள்ளி முதல்வரின் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும், என ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் குருநாதன் கேட்டு கொண்டுள்ளார்.