வெளிநாடுகளிலிருந்து பேராசிரியர்களை வாடகைக்கு பணியமர்த்திக் கொள்ளும்
ஐ.ஐ.டி.,களின் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவையிடமிருந்து சாதகமான
தலையசைப்பு கிடைத்துள்ளது.
வெளிநாட்டு பேராசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு விசா வழங்குவதற்கான வருமான
அளவீட்டை மத்திய உள்துறை அமைச்சகம் தளர்த்தியுள்ளது. இதன்மூலம்,
திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி, ஆண்டிற்கு 14,000 டாலர்கள் சம்பளம் என்ற
அடிப்படையில் வெளிநாட்டு பேராசிரியர்களை ஐ.ஐ.டி.,கள் பணியமர்த்திக்
கொள்ளலாம்.
இதற்கு முன்னதாக, 25,000 டாலர்களுக்கும் குறைவாக வழங்கப்படும் ஆண்டு
சம்பளத்திற்கு விசா வழங்கப்படுவதில்லை என்ற விதிமுறை இருந்தது. தற்போது அது
14,000 டாலர்கள் என்ற அளவில் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைப் பற்றி IIT -களுக்கு ஏற்கனவே
தெரிவிக்கப்பட்டுள்ளதாக மனிதவளத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறின.
இதன்மூலம், தங்களிடம் நிலவும் பேராசிரியர் பற்றாக்குறையை IIT -களால் எளிதாக
போக்கிக் கொள்ள முடியும்.
எனினும், இந்த புதிய விதிமுறை வரும் 2015ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையே
செல்லத்தக்கது. அந்த இரண்டு வருட காலகட்டத்தில் வெளிநாட்டு பேராசிரியர்களை
பணியமர்த்துவதில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து, இந்த புதிய விதிமுறை
மறுமதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...