ஐ.ஐ.டி., மும்பையில் நடைபெறும் வருடாந்திர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழா, 2014ம் ஆண்டு ஜனவரி 3 முதல் 5ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதிலுமிருந்தும் 1
லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கலந்து கொள்வார்கள். இவற்றில்,
நாடெங்கிலும் 2,300 கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் மற்றும் 500 வெளிநாட்டு
கல்லூரிகளிலிருந்து வரும் நபர்களும் அடக்கம்.
இந்த விழாவிற்கான கண்காட்சி அம்சங்கள், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி
மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வரவிருக்கின்றன. இந்த
அம்சங்களில், BINA - 48 என்ற உயர்ரக மேம்படுத்தப்பட்ட ரோபோவும் அடக்கம்.
இதுதவிர, கால்பந்து விளையாடுதல், நாட்டியமாடுதல் மற்றும் பாடுதல்
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மனித மாதிரிகளும்(humanoids)) பங்கேற்க உள்ளன.
இந்திய பொதுத்துறை நிறுவனங்களான NPCIL மற்றும் DRDO ஆகியவையும்
கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இந்த விழாவில், சமீபத்தில் பாரத ரத்னா
விருதுக்கு அறிவிக்கப்பட்ட சி.என்.ஆர்.ராவ், கிரண்பேடி, உலகப்புகழ் இந்திய
கணிப்பொறி இன்ஜினியர் பிரனவ் மிஸ்ட்ரி, ராஜேந்திர பச்செளரி மற்றும் உலகம்
முழுவதிலுமிருந்து வரும் 15 புகழ்பெற்ற நபர்கள் உரை நிகழ்த்தவுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...