2014-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு,
தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு 1
கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 100 ரூபாய் ரொக்கம் என சிறப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே வழங்கப்படும்
என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசுக்கு 281
கோடி ரூபாய் செலவு ஏற்படும்.
இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை பாரம்பரிய
முறைப்படி சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழிவகுக்கும் என்று தமிழக அரசு
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.