நம்பிக்கையை பெற்றுவிட்டால் முடியாதது எதுவும் இல்லை : முதல்வர் கிறிஸ்துமஸ் வாழ்த்து:
இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ்
பெருநாளாகக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், கிறிஸ்தவப் பெருமக்கள்
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மிக்க
மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மனித வாழ்க்கையில்
நம்பிக்கை என்னும் சக்தியைப் பெற்றுவிட்டால், இந்த உலகில் முடியாதது
எதுவும் இல்லை என்ற இயேசுபிரான் அவர்களின் போதனைக்கு ஏற்ப ஒவ்வொரு மனிதரும்
நம்பிக்கையுடன் செயல்பட்டால் அவர்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்.
இயேசுபிரானின் போதனைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் விரும்பியதை
இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
“நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமா, அதையே மற்றவர்களுக்கு நாம்
செய்ய வேண்டும்” என்ற இயேசுபிரானின் போதனையை மனதில் கொண்டு அனைவரையும்
சமமாக பாவித்து அன்பு செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கிறிஸ்தவ
பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகளை
மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...