அண்ணா பல்கலைக்கழகம், என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை அறிவியல்
கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்.,
எம்.பிளாண் முதலிய படிப்புகளில் சேர்வதற்கு ‘டான்செட்’ என்ற நுழைவுத்தேர்வை
எழுதவேண்டும். இந்த தேர்வை அண்ணாபல்கலைக்கழகம் மார்ச் மாதம் 22–ந்தேதி
நடத்துகிறது. அதில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான்
மாணவர் சேர்க்கை நடைபெறும்.
டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu/tancet2014
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அதாவது தங்களின் பெயரை பதிவு செய்து
கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், செயலாளர்,
டான்செட், அண்ணாபல்கலைக்கழகம், சென்னை என்ற முகவரிக்கு டிமாண்ட் டிராப்ட்
எடுத்து, புகைப்படத்துடன் சான்றிதழ்களையும் இணைத்து பிப்ரவரி
20–ந்தேதிக்குள் அனுப்பவேண்டும்.
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள மேலாண்மைத்துறை மற்றும் கணினி அறிவியல்
துறைகளில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. படிப்பில் சேரவும் இந்த டான்செட்
தேர்வை எழுதவேண்டும்.
இந்த தகவலை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...