நல்லொழுக்க வகுப்பு புறக்கணிக்கப்பட்டு வருவதால் பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேதனை தெரிவித்துள்ளது.
மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: "திருப்புவனம் பள்ளி ஆசிரியர் பைரவரத்தினம் மாணவரால் தாக்கப்பட்டுள்ளார். இதை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதுமான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட கல்வி அலுவலகம் மேற்கொள்ள வேண்டும்.
நல்லொழுக்க வகுப்பு புறந்தள்ளப்பட்டு முழு தேர்ச்சி பெற வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு கல்வித்துறை செயல்படுவதால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க மாணவர்களுக்கு நல்ல மதிப்பீடு வழங்கும் முறையை பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...