ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை
உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் திராவிடர்
கழகம் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
வெளியிட்டுள்ள அறிக்கையில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு உடனடியாக
ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் தளர்வு
வழங்கி உரிய நடவடிக்கையை எடுக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்
அறிவுறுத்தியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே தமிழக அரசு இனியும் பிடிவாதம் காட்டாமல்,
இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்குரிய தளர்வு மதிப்பெண் அடிப்படையில் ஏற்கனவே
தேர்வு எழுதியவர்களைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின்
நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள் நியமனத்தில் இட
ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது சட்டவிரோதமானது என
மத்திய சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளதாகவும், எனவே தமிழக அரசு தனது
தவறான அணுகுமுறையை மாற்றிக்கொண்டு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் இட
ஒதுக்கீட்டை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...