பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு
முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களில் 24 மணி நேரமும் காவலர்களை நியமிக்க
வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனால் ஒரு ஏடிஎம் மையத்தை நிர்வகிக்க மாதத்துக்கு ரூ. 40 ஆயிரம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதை ஈடுகட்ட வாடிக்கை யாளர்கள் ஏடிஎம் மையங்களை உபயோகிப் பதற்கு கட்டணம்
வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு
வங்கிகள் முன் வைத்துள்ளன.
நாடு முழுவதும் 1.65 லட்சம் ஏடிஎம்கள் உள்ளன. ஏற்கெனவே வாடிக்கையாளர்கள்
ஏடிஎம்களை பயன்படுத்துவற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 4 முதல் ரூ. 5 வரை
செலவாகிறது. இந்த செலவை வங்கிகள்தான் ஏற்கின்றன.
ஏடிஎம்களில் 24 மணி நேர காவலர்கள் நியமிக்கப்பட வேண்டு மெனில் ஒரு பரிவர்த்தனைக்கு
ரூ. 10 தொகையை வாடிக்கை யாளர்கள் செலுத்தினால் மட்டுமே சாத்தியமாகும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
ஏடிஎம்களுக்கு முழு நேர பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனில் வங்கிகளுக்கு
கூடுதல் செலவாகும். இந்த செலவை வங்கிகள் வாடிக்கையாளரிடமிருந்துதான்
வசூலிக்க வேண்டியிருக்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத வங்கியின் தலைமைச்
செயல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வாடிக்கையாளர்கள் இந்த கூடுதல் சுமையை ஏற்கத் தயாராக உள்ளனரா என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.
இத்தகைய சூழலில் மின்னணு பாதுகாப்பு சாதனங்களை அளிக்கும் ஜிகாம் நிறுவனம்
ஏடிஎம்களின் பாதுகாப்புக்கு புதிய முறையை உருவாக்கியுள்ளது.
மின்சாரத்தை சேமிக்கும் அதே சமயம் 24 மணி நேரம் செயல்படக் கூடிய தொலை
தூரத்திலிருந்து நிர்வகிக்கக் கூடிய பாதுகாப்பு கருவியை ஏற்படுத்தியுள்ளது.
அசாதாரண சூழல் ஏற்படும் ஏடிஎம்களில் உடனடியாக சென்று பாதுகாப்பு
நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் க்யூஆர்எம் சேவை இணைப்பும் இத்துடன்
அளிக்கப்பட்டுள்ளது.
இது முற்றிலும் சேவை அடிப்படையிலானது. இதற்கு கூடுதல் முதலீடும் தேவையில்லை. ஆண்டு நிர்வாகக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
ஒரு ஏடிஎம்-மிற்கு இரண்டு காவலர்களை நியமிப்பதால் ஏற்படும் செலவைக் காட்டிலும் மிகக் குறைவாகும்.
ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு சாதனம் செயல்படும்.
ஜிகாம் நிறுவனத்தின் ஆண்டு விற்பனை வருமானம் ரூ. 691 கோடியாகும். 5
நாடுகளில் இந்நிறுவன கருவிகள் விற்பனையாகின்றன. இந்தியாவில் 400 நகரங்களில்
10 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்துக்கு உள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...