திருச்சி, பாரதிதாசன் பல்கலைக் கழக, துணைவேந்தர் பணியிடம், கடந்த, ஜூலை
முதல், காலியாக உள்ளது. தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழக
துணைவேந்தர் பதவியும், அக்டோபரில் இருந்து, காலியாக உள்ளது. மேலும், சேலம்
பெரியார் மற்றும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகங்களின், துணைவேந்தர்
பதவிகளும், செப்டம்பர் முதல், காலியாக உள்ளன.
இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக, துணைவேந்தர் தேர்வுக் குழுக்கள், சில அமர்வுகள் கூடி
விவாதித்தன. ஆனால், துணைவேந்தர்கள், நியமனம்
செய்யவில்லை. இதற்கிடையே, துணைவேந்தர்கள் நியமனத்திற்கான, தகுதி குறித்து,
மதுரை காமராஜ் பல்கலை ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த கிருஷ்ண சாமி,
ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இவ்வழக்கு, 2013 டிச., 9ம் தேதி,
விசாரணைக்கு வந்தது, பின், பிப்., 27ம் தேதிக்கு,தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இவ்வழக்கில், நீதிமன்றம், எந்த தடை உத்தரவையும்
பிறப்பிக்கவில்லை.ஆனாலும், துணைவேந்தர் நியமனப் பணிகள் நடக்கவில்லை.
இப்பல்கலைக் கழகங்களில், துணைவேந்தர்கள் இல்லாததால், முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் உள்ளன. இதனால், மாணவர்கள்,
உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு தேவையான, பட்டம் பெற முடியாமல்
தவிக்கின்றனர்.
சட்ட சிக்கல்:இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், ஜூலை வரை துணைவேந்தர்களை நியமிக்க முடியாது. தேர்வுக்குழு அமைத்து, ஆறுமாதத்திற்கு மேல் ஆகிவிட்டால், அந்த குழுக்கள் செல்லுமா என்கிற, சட்ட சிக்கலும் ஏற்படும்.தேர்வுக் குழுக்கள், காலாவதி ஆகி விட்டால், மீண்டும், செனட், சிண்டிகேட் கூடி, தேர்வுக்குழு உறுப்பினர்களை, தேர்வு செய்ய வேண்டும். இது, மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தும். துணைவேந்தர்கள் நியமனங்களை துரிதப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சட்ட சிக்கல்:இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், ஜூலை வரை துணைவேந்தர்களை நியமிக்க முடியாது. தேர்வுக்குழு அமைத்து, ஆறுமாதத்திற்கு மேல் ஆகிவிட்டால், அந்த குழுக்கள் செல்லுமா என்கிற, சட்ட சிக்கலும் ஏற்படும்.தேர்வுக் குழுக்கள், காலாவதி ஆகி விட்டால், மீண்டும், செனட், சிண்டிகேட் கூடி, தேர்வுக்குழு உறுப்பினர்களை, தேர்வு செய்ய வேண்டும். இது, மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தும். துணைவேந்தர்கள் நியமனங்களை துரிதப்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...