Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
15,000 பள்ளிகளில் திறந்தவெளியில் சமையல்: பணியாளர்கள் அதிருப்தி:
தமிழகத்தில் 15 ஆயிரம் பள்ளிகளில், முற்றிலும், சத்துணவு கூடங்கள்
இல்லாமல் திறந்த வெளியில் மாணவர்களுக்கான மதிய உணவை தயாரிக்கும்
அவலநிலையில் பள்ளி சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 1982-83ம் ஆண்டில் தமிழகத்தில் பள்ளி மதிய உணவு திட்டத்தை
மேம்படுத்தி, சத்துணவு திட்டம் துவங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ,
தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் 61 லட்சம் மாணவர்கள்
பயனாளிகளாக உள்ளனர்.
தமிழகத்தில் 43 ஆயிரத்து 787 பள்ளி சத்துணவு மையங்கள் செயல்பட்டு
வருகின்றன. இந்த மையங்களில், சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல்
உதவியாளர் என்ற பிரிவுகளில் 1.60 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 32 ஆண்டுகளாக, சத்துணவு மையங்கள் மேம்படுத்தப்படாமல் உள்ளன.
மேலும், 15 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு கூடங்கள் இல்லாமல்,
மாணவர்களுக்கான மதிய உணவு திறந்தவெளியில் சமைக்கப்படுகிறது. இதனால்,
மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி பள்ளி
சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் விஜயபாண்டியன்
கூறியதாவது:சத்துணவு ஊழியர்களுக்கு பணிநிரந்தரம், பதவிஉயர்வு, ஓய்வூதியம்,
சம்பள உயர்வு எதுவும் கிடையாது. தேர்தல் அறிவிப்பில், எங்கள் கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும் என்று அறிவித்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இதுவரை எவ்வித
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. 30 ஆயிரம் பணியாளர்கள் இடம் காலியாக
உள்ளது.
குறிப்பாக, 15 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு கூடங்கள் இல்லாமல்,
திறந்தவெளியில் சமையல் செய்யும் அவலநிலையில் தான் உள்ளது. 43 ஆயிரத்து 787
மையங்களில் வெறும் ஐந்து சதவீத மையங்களுக்கே எரிவாயு இணைப்பு
வழங்கப்பட்டுள்ளது. சத்துணவு மையங்களில் அமைப்பாளர்களுக்கு என்று நாற்காலி,
மேஜை, பதிவேடுகளை பராமரிக்க பீரோ போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும்
ஏற்படுத்தி தருவதற்கு அரசு முன்வரவில்லை. இதனால், சத்துணவு பணியாளர்கள்
கடும் அதிருப்தியில் உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








