25
பணியிடங்களுக்கான குரூப் 1 மெயின் தேர்வு முடிவில், 60 பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டதில், 50 பேர் மனிதநேய மையத்தில் படித்தவர்கள்.
இதையொட்டி, சைதை துரைசாமிக்கு கல்வியாளர்கள் மற்றும் இந்த தேர்வில்
வெற்றிபெற்ற மாணவ-மாணவிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.சிவில் சர்வீசஸ் பணிகளுக்கு இலவச பயிற்சிசென்னை
மாநகர மேயர் சைதை துரைசாமியை தலைவராகவும், மல்லிகா துரைசாமி, வெற்றி
துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோரை இயக்குநர்களாகவும் கொண்ட மனிதநேய இலவச
பயிற்சி மையம், மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்.போன்ற சிவில் சர்வீசஸ்
பணிகளுக்காகவும்,
தமிழக அரசின் தேர்வுகள், நீதிபதி பதவிகளுக்கான தேர்வுகள்,
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பல்வேறு அரசுப்பணிகளுக்கான
தேர்வுகளுக்காக, மாணவர்களுக்கு இலவச பயிற்சியும், இலவச தங்குமிட வசதியும்
அளித்து வருகிறது.மாணவர்களுக்கான பயிற்சி கையேடுகள் அனைத்தும்
இலவசமாகவே வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி மையத்தில் படித்த 2169 மாணவர்கள்
தேர்ச்சிபெற்று பல்வேறு அரசுப்பணியில் தற்போது பணியாற்றுகிறார்கள்.25 பணியிடங்களுக்கு...இந்த
நிலையில் தமிழக அரசின் தேர்வாணையக் குழு கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர்
மாதம் 6-ந் தேதி 8 துணை கலெக்டர்கள், 4 டி.எஸ்.பி.க்கள், 7 வணிகவரி உதவி
ஆணையர்கள், ஒரு மாவட்ட பதிவாளர், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகள் என 25
பணிகளுக்கான விளம்பரம் வெளியிட்டது.இதற்கான முதன்மைத் தேர்வு
16-2-2013 அன்று நடந்தது. முதன்மைத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கான
மெயின்தேர்வு கடந்த அக்டோபர் மாதம் 25, 26, 27 ஆகிய தேதிகளில் நடந்தது.மனிதநேயத்தில் படித்த 50 பேர் பொதுவாக,
ஒரு பணியிடத்துக்கு 2 பேர்களை, மெயின் தேர்வில் தேர்ந்தெடுப்பார்கள்.
ஆனால், இந்த தேர்வில் சிலர் ஒரே மதிப்பெண்கள் பெற்றதால் 60 பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 22 பேர் பெண்கள். இந்த 60 பேரில் 50
பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் என்பது மிகவும்
பாராட்டுக்கு உரியதாகும். தேர்ச்சிபெற்ற 60 பேருக்கும் ஏப்ரல் 7-ந் தேதி
சென்னையில் நேர்முக தேர்வு நடக்கிறது. இதில் 25 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு
அரசுப் பணிகளில் அமர்த்தப்படுவார்கள்.சைதை துரைசாமிக்கு பாராட்டுஇந்த
மாபெரும் சாதனைக்காக கல்வியாளர்களும், இந்த மையத்தில் படித்து தேர்வுபெற்ற
மாணவ மாணவிகளும் மேயர் சைதைதுரைசாமிக்கும், மனிதநேயத்தின்
ஒருங்கிணைப்பாளரான சாம்ராஜேஸ்வரனுக்கும் நன்றியும், பாராட்டுக்களும்,
வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.
10,11,12 Public Exam Preparation March-2024
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Wednesday 26 March 2014
Home
TNPSC
25 பணியிடங்களுக்கான குரூப் 1 மெயின் தேர்வு முடிவு: தேர்ந்தெடுக்கப்பட்ட 60 பேரில் 50 பேர் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் சைதை துரைசாமிக்கு பாராட்டு :
25 பணியிடங்களுக்கான குரூப் 1 மெயின் தேர்வு முடிவு: தேர்ந்தெடுக்கப்பட்ட 60 பேரில் 50 பேர் மனிதநேய மையத்தில் படித்தவர்கள் சைதை துரைசாமிக்கு பாராட்டு :
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...