பத்தாம்
வகுப்பு தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழகம், புதுவையில் 10 லட்சத்து 38
ஆயிரத்து 876 மாணவர்கள் இன்று தமிழ் முதல்தாள் தேர்வு எழுதுகின்றனர்.தமிழகம்,
புதுச்சேரியை சேர்ந்த 11,552 பள்ளிகள் மூலம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876
மாணவ மாணவியர் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில்
279 பள்ளிகளை சேர்ந்த 18ஆயிரத்து 509 மாணவ மாணவியருக்காக 46 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 588 பள்ளிகளை சேர்ந்த 56 ஆயிரத்து
556 மாணவ மாணவியருக்காக 207 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம்
முழுவதும் மொத்தம் 3,179 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று
தமிழ் முதல்தாள் தேர்வு நடக்கிறது. 27ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், ஏப்ரல்
1ம் தேதி ஆங்கிலம் முதல்தாள், 2ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 4ம் தேதி
கணக்கு, 7ம் தேதி அறிவியல், 9ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.
தேர்வுகள்
காலை 9.15 மணிக்கு தொடங்கும். கேள் வித்தாள் படித்துப் பார்க்க வும்,
முதல்பக்கத்தில் விவரங்களை சரிபார்க்கவும் 15 நிமிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங் களை கண்காணிக்க 5,000 பேர் கொண்ட
பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர வருவாய் அலுவலர்கள், போலீசார்
கொண்ட குழுவும் தேர்வு மையங்களை கண்காணிக்கும்.
10,38,876 பேர் எழுதுகின்றனர்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...