தமிழகம் முழுவதும் பருவமழை பொழிய தவறியதால் சென்னை தவிர, பிற
மாவட்டங்கள், வறட்சி மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில்,
தமிழக அரசு, வன துறை மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்,
பசுமைபடுத்தும் நோக்கத்துடன், மரக்கன்றுகள் நட, பள்ளிக்கல்வி துறை
இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கும், சுற்றறிக்கை ஒன்றை
அனுப்பியுள்ளார். அதில், தமிழகத்தில், வன துறை மூலம், 3.76 லட்சம்
மரக்கன்று, என்.ஜி.ஓ.,க்கள் மூலம், 13.94 லட்சம் மரக்கன்று பெற இயலும்.
அந்தந்த மாவட்ட வனத்துறை மற்றும், என்.ஜி.ஓ.,க்கள் மூலம் மரக்கன்று பெற்று,
ஒவ்வொரு பள்ளியிலும் மரக்கன்று நட்டு, அதனை வகுப்பாசிரியர் பராமரிக்க
வேண்டும். அதை பள்ளி தலைமை ஆசிரியர் கண்காணிக்க வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளித்தலைமை ஆசிரியர் கூறியதாவது: பள்ளி வளாகங்களில், மரக்கன்று நட
உத்தரவிடப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை பராமரிப்பதில் தான், பள்ளி
ஆசிரியர்களுக்கு சிக்கல் உள்ளது. தமிழகம் முழுவதும், கடும் வறட்சி
நிலவுவதால், தண்ணீர் பிரச்னை உள்ளது. சில பள்ளி, பெற்றோர்-ஆசிரியர் கழகம்
மூலம், தேவையான தண்ணீர் வசதி செய்துள்ளனர்.
சில பள்ளிகளில் இக்கழகத்தினர் ஆர்வமின்றி, தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.
பள்ளிக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், மரக்கன்றுகளை எவ்வாறு
பராமரிப்பது இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...