முதுமலை சாலையோரத்தில் காணப்பட்ட "பிளாஸ்டிக் கழிவுகளை" தொரப்பள்ளி மாணவர்கள் அகற்றினர்.தொரப்பள்ளி முதல் அபயாரண்யம் வரையிலான முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய சாலையோரத்தில் அதிகளவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கழிவுபொருட்கள் சுற்றுலாப்பயணிகளால் வீசப்பட்டு வருகின்றன. இதனால், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தொரப்பள்ளி ஜி.டி.ஆர்., பள்ளி மாணவர்கள் சார்பில் சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் கலாவதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் வனச்சரகர் காந்தன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டுமின்றி "குடிமகன்கள்" வீசியெறியும் மதுபான பாட்டில்களும் அதிகளவில் காணப்பட்டன.
"இப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி மது அருந்துவோர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை வீசியெறிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பிளாஸ்டிக்கால் வன விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த இயலும்" என பள்ளி நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் வனவர் மனோகரன் தலைமையிலான வனத்துறையினர் வன விலங்குகளால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...