ரெயில்டிக்கெட் முன்பதிவு திட்டத்தை நவீனப்படுத்தும் பணிக்காக தெற்கு
ரெயில்வேக்கு உள்பட்ட முன்பதிவு மையங்கள் நாளை காலை 11.30 மணி முதல் மதியம்
1 மணி வரை செயல்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்பதிவு மையம்
ரெயில்களின் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக முன்பதிவு மையங்கள் உள்ளன.
இந்த மையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை டிக்கெட் முன்பதிவு
செய்து கொள்ளலாம். ஒரு சில இடங்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி
வரையும், மாலை 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் டிக்கெட் முன்பதிவு செய்யும்
வசதி உள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் செயல்படுகிறது.
இதற்கிடையே, முன்பதிவு மையங்களுக்கான கம்ப்யூட்டர்களை நவீனப்படுத்தும்
பணி நாளை(ஞாயிற்றுக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக தெற்கு
ரெயில்வேக்கு உள்பட்ட தமிழக, கேரள மாநிலங்களில் டிக்கெட் முன்பதிவு
செய்யும் வசதி சுமார் 1½ மணி நேரம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.
அதன்படி, தெற்கு ரெயில்வேக்கு உள்பட்ட அனைத்து முன்பதிவு மையங்களும் நாளை
காலை 8 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும்
மட்டுமே செயல்படும்.
அதாவது, காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும் செயல்படாது.
ஆன்லைனிலும் முடியாது
அதே நேரத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலமாக ஆன்லைனிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.
மதியம் 2 மணிக்கு பிறகு, முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யும் பணிகள் மட்டும் கம்ப்யூட்டர் இல்லாமல் நேரடியாக மேற்கொள்ளப்படும்.
இந்த பணிகள் தென்னக ரெயில்வே மட்டுமின்றி, தென்மத்திய ரெயில்வேயிலும் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...